தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித்துறை பல்வேறு புதிய திட்டங்களை ஏற்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் தனியாருக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையை கொண்டு வர வேண்டும் என திட்டமிடப்பட்டு வருகின்றது. இதில் தமிழகத்தில் உள்ள 7000 அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளார். இதற்காக சுமார் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் டெண்டர் விரைவில் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதேபோல 20000 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குழந்தைகளின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் அமைய உள்ளது. இதை தவிர தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.