போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாப் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் கட்டணமில்லாப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் இப்பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், www.civilservicecoaching.com என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் 26/10/2022 வரை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் செயல்பட்டு வரும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது ceccnandanam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு 9865808127, 9894541118, 8667276684, 6381481895 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 29/10/2022 சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் நவம்பர் மாதம் வரை நடைபெறும். மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.