நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில் முச்சோவா மற்றும் படோசா வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில், செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரோமானியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனுடன் மோதினார். போட்டியில் முச்சோவா 6-2, 6-1 என எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதே போன்று, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, சீன வீராங்கனை வாங் ஜி யு உடன் போட்டியிட்டார். அதில் முதல் செட்டில் 6-7 (4-7) என இழந்த படோசா, அடுத்த இரண்டு செட்களை 6-1, 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.