சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இத தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் உள்ளூர் மக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.