உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகள் வேண்டாம் - உச்சநீதிமன்றம் 

March 24, 2023

உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகள் வேண்டாம் என உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சையத் நசீர் உசேன், உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்துவது தொடர்பான கேள்விகளை மாநிலங்களவையில் எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் உயர்நீதிமன்றங்களில் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அரசியலமைப்பு பிரிவு 348(1) (அ) கூறுகிறது. ஜனாதிபதியின் முந்தைய ஒப்புதலுடன் […]

உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகள் வேண்டாம் என உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சையத் நசீர் உசேன், உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்துவது தொடர்பான கேள்விகளை மாநிலங்களவையில் எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் உயர்நீதிமன்றங்களில் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அரசியலமைப்பு பிரிவு 348(1) (அ) கூறுகிறது. ஜனாதிபதியின் முந்தைய ஒப்புதலுடன் இந்தி மொழி பயன்படுத்துவதை அங்கீகரிக்கலாம் அல்லது மாநிலத்தின் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வேறு எந்த மொழியையும் உயர்நீதிமன்ற நடவடிக்கைக்கு அங்கீகரிக்கலாம் என 348-ன் உட்பிரிவு 2 கூறுகிறது.

தமிழ்நாடு, குஜராத், சத்தீஷ்கார், கொல்கத்தா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்களது மாநில மொழிகளை பயன்படுத்த அனுமதி கேட்டன. இதற்கான முன்மொழிவுகளை இந்திய அரசு பெற்றது. இதுகுறித்து இந்திய தலைமை நீதிபதியிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. உரிய விவாதங்களுக்குப் பிறகு, அந்த முன்மொழிவுகளை ஏற்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அதனை மறு ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசு மற்றொரு கோரிக்கையை முன்வைத்தது. இதற்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. முந்தைய முடிவுகளே மீண்டும் வலியுறுத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu