நோபல் பரிசு விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரான் நாடுகளுக்கு அழைப்பு இல்லை என நோபல்
அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கு நோபல் பரிசு அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விழா ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் நடைபெறும். இதற்கு ஸ்வீடனை சேர்ந்த பல அரசியல் காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்கள் இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன. உக்ரைன் போர் மற்றும் ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணை ரஷ்யா எதிர்த்தது போன்றவற்றை காரணமாக கூறியுள்ளனர். இந்த கடும் எதிர்ப்பு காரணமாக ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விடுத்த அழைப்பை நோபல் அறக்கட்டளை திரும்ப பெற்றது.