ராமேஸ்வரத்தில் ஐந்து நாட்களுக்குப் பிறகு இயல்புநிலை திரும்பியதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடந்த 13ஆம் தேதி முதல் மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். மேலும் கடலுக்கு செல்வதற்கான அனுமதியும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஐந்து நாட்களாக 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 2000 விசைப்படைகள் 15 ஆயிரம் நாட்டு படகுகள் ஆகியவை கடலுக்குச் செல்லவில்லை. மேலும் ராமேசுவரம் பாம்பன் உள்ளிட்ட பல பகுதிகளைக் 1500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மேல்நாட்டு படகுகள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் வருமானம் இன்றி சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடல் சற்று அமைதியாக காணப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஐந்து நாட்களுக்கு பின்னர் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.