மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்துள்ளது.
அமெரிக்கா தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியாவை அழைத்தது. இதற்கு வடகொரியா சம்மதிக்கவில்லை. இது குறித்து அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங்கின் சகோதரி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஒரு நாட்டின் இறையாண்மை என்பது பேச்சுவார்த்தையின் மூலம் சமரசம் செய்ய முடியாது. எனவே அமெரிக்கா விடுத்த அழைப்பை ஏற்க முடியாது என்றார். அதோடு அமெரிக்கா இரட்டை வேடம் போடுவதாகவும் விமர்ச்சித்துள்ளது.
வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை சமீபத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி கொண்டது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தது அமெரிக்கா. இதனை அடுத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்க அழைப்பு விடுத்தது.