ஜப்பான் பிரதமர் ஹோமியோ கிஷிடா வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் சோதனை செய்து வருகிறது. இதனால் வட கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையில் அவ்வப்போது மோதல் வந்த வண்ணம் உள்ளது.
இதனால் தென் கொரியாவும், ஜப்பானும் தங்களுடைய பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. ஆனால் வடகொரியா இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக கருதுகிறது. எனவே இந்த பயிற்சியை நிறுத்தும்படி அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது. எனினும் அந்த நாடுகள் தொடர்ந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஜப்பான் பிரதமர் ஹோமியோ கிஷிடா வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி விரைவில் அவர்கள் சந்திக்க உள்ளனர் என்று வடகொரிய தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங் கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஜப்பானிலிருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் வடகொரியாவுக்கு கடத்தப்பட்டவர்களை விடுவிப்பது மற்றும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.