TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வின் முடிவு கடந்த மார்ச் மதம் 25ம் தேதி வெளியானது. இதில் 10,219 காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இதனடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி ஒதுக்கீடு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 2௦ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் முதல் கட்டமாக குரூப் 4 தொகுதியில் வரும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி மற்றும் விபரம் தேர்வர்களுக்கு அவரவர் தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும். தேர்வாணைய இணையதளத்தில் அவர்களுக்கான அழைப்பு கடிதம் வெளியிடப்படும். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்தி இல்லை என்றால் அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.