எல்எல்ஆர் உரிமம் பெறுவதற்கு இனி இ சேவை மையங்களில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எல்எல்ஆர் உரிமம் பெறுவதற்கு பொதுமக்கள் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும், இடைத்தரர்களையும் தனியார் இணையதள மையங்களையும் அணுகி வருகின்றனர். இதனால் மக்களுக்கு தேவையற்ற செலவு மற்றும் அலைச்சல் ஏற்படுவதுடன் வெளிப்படை தன்மை இல்லாமலும் இருந்து வருகிறது. இத்துடன் இந்த சேவைகளை பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு சென்று பெற வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக மற்றும் பொதுமக்களின் சிக்கல்களை குறைவதற்காகவும் இ சேவை மையங்களில் எல்எல்ஆர் பெறுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் போக்குவரத்து துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும், முதலமைச்சரின் ஆணைப்படியும் மாநிலம் முழுவதும் உள்ள 55 ஆயிரத்திற்கும் அதிகமான இ சேவை மையங்கள் மூலம் இந்த எல்எல்ஆர் பெற விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி இந்த சேவையை பெறுவதற்கு பொதுமக்கள் சேவை கட்டணமாக 60 ரூபாய் செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்எல்ஆர் வழக்கம்போல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தொடர்ந்து மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய வாகன ஓட்டுனர் உரிமம், டிரைவிங் லைசன்ஸ், பிரமிட், உரிமை மாற்றம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.