ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஐ பி ஓ வெளியிடுவதற்கு பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 7250 கோடி மதிப்பில் ஐபிஓ வெளியிடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஐபிஓ வெளியிடும் முதல் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் ஐபிஓ விண்ணப்பத்தை ஓலா எலக்ட்ரிக் சமர்ப்பித்தது. கோட்டக் மஹிந்திரா கேப்பிட்டல் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகியவை இந்த ஐபிஓவை ஒருங்கிணைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. புதிதாக 5500 கோடி ரூபாய் பங்குகள் இந்த ஐபிஓ வில் வெளியிடப்படுகிறது. நிறுவனத்தின் பங்குதாரர்கள், ஆஃபர் விலையில் 95.19 மில்லியன் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளனர். இதன் மதிப்பு 1750 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. ஐபிஓ வில், ஓலா எலக்ட்ரிக் தோற்றுநர் பாவிஷ் அகர்வால் 47.3 மில்லியன் பங்குகளை விற்பது குறிப்பிடத்தக்கது.