கிருஷ்ணா கோதாவரி படுகையில் எண்ணெய் உற்பத்தி தொடக்கம் - ஓஎன்ஜிசி அறிவிப்பு

January 11, 2024

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி, கிருஷ்ணா கோதாவரி படுகையில் எண்ணெய் உற்பத்தியை தொடங்கி உள்ளது. கடந்த ஜனவரி 7ஆம் தேதி, வங்கக் கடலில் அமைக்கப்பட்டுள்ள கே ஜி டி5 தொகுப்பிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது, கடற்கரையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 3200 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி தொடங்கியுள்ள இந்த எண்ணெய் உற்பத்தி மூலம், அந்நிறுவனத்தின் மொத்த எண்ணெய் உற்பத்தி அளவு 11% உயர்ந்துள்ளது. […]

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி, கிருஷ்ணா கோதாவரி படுகையில் எண்ணெய் உற்பத்தியை தொடங்கி உள்ளது.

கடந்த ஜனவரி 7ஆம் தேதி, வங்கக் கடலில் அமைக்கப்பட்டுள்ள கே ஜி டி5 தொகுப்பிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது, கடற்கரையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 3200 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி தொடங்கியுள்ள இந்த எண்ணெய் உற்பத்தி மூலம், அந்நிறுவனத்தின் மொத்த எண்ணெய் உற்பத்தி அளவு 11% உயர்ந்துள்ளது. அதே சமயத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி 15% உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வங்கக்கடலில் அமைக்கப்பட்டுள்ள 2ம் தொகுப்பில் இருந்து, நாளொன்றுக்கு 45000 பேரல் கச்சா எண்ணெயும், ஒரு கோடி லட்சம் கன மீட்டர் எரிவாயுவும் உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu