ஊட்டி மலர் கண்காட்சி நாளை முதல் தொடக்கம்

ஊட்டியில் நாளை முதல் மலர் கண்காட்சி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்று ஊட்டி. இங்கு ஆண்டுதோறும் கோடைகாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இங்கு கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான கோடை விழா நாளை 126 ஆவது மலர் கண்காட்சியுடன் ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்குகின்றது. இந்த கண்காட்சி 20ம் தேதி வரை நடக்கின்றது. மலர் கண்காட்சியை முன்னிட்டு […]

ஊட்டியில் நாளை முதல் மலர் கண்காட்சி தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்று ஊட்டி. இங்கு ஆண்டுதோறும் கோடைகாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இங்கு கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான கோடை விழா நாளை 126 ஆவது மலர் கண்காட்சியுடன் ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்குகின்றது. இந்த கண்காட்சி 20ம் தேதி வரை நடக்கின்றது. மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்டு 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு சிறப்பு நிகழ்வாக நாளை மற்றும் நிறைவடையும் நாளில் லேசர் லைட் ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது மலர் கண்காட்சிக்காக மேடை அமைத்தல்,அரங்குகள் அமைத்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையிலும் மலர்கண்காட்சியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu