ஓபன் ஏ ஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் அல்ட்மேன், புதிய கிரிப்டோ கரன்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். வேர்ல்ட் காயின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரிப்டோ கரன்சி, நேற்று முதல் தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவை ஒட்டிய தாக்கத்தால், வேர்ல்ட் காயின் கரன்சியில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து காணப்பட்டது. அறிமுகமானபோது 0.15 டாலராக இருந்த வேர்ல்ட் காயின் மதிப்பு, 5.29 டாலர் வரையில் உயர்ந்தது.
இதுகுறித்து பேசிய சாம் அல்ட்மேன், “மூன்று வருடங்களுக்கு முன்பே வேர்ல்ட் காயின் தொடங்கப்பட்டு விட்டது. ஆனால், அதன் வெளியீடு இப்போது நடந்துள்ளது. இது வெற்றி பெறும் பட்சத்தில், சர்வதேச பொருளாதாரத்தில் மிக முக்கிய மாற்றம் மற்றும் தாக்கத்தை வேர்ல்ட் காயின் ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.