ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை வீரர்களுக்கான அனைத்து நிலுவைத் தொகையையும் பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது 6 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள், வீர தீர செயல் விருது பெற்றவர்கள் ஆகியோருக்கான ஓ.ஆர்.ஓ.பி. நிலுவைத் தொகையை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும், 70 வயதான ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஓ.ஆர்.ஓ.பி. நிலுவைத் தொகையை ஜூன் 30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும், ஓ.ஆர்.ஓ.பி. அனைத்து நிலுவைத் தொகையையும் மூன்று தவணைகளில் வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.