பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது நிலையில் 13,000 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதனை ஒட்டி தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவை தவிர தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் ஆந்திரா,கர்நாடகா, கேரளா போன்ற தமிழக எல்லையோர பகுதிகளில் 90 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புக்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உரிமம் பெற்ற 13,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் சில முக்கிய பாதுகாப்பு பணியில் இருக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பத்தாயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.