ஆபத்தான நிலையில் பூமி - விஞ்ஞானிகள் அதிர்ச்சி அறிக்கை

October 14, 2024

பூமியின் காலநிலை மாற்றம் கடுமையான நிலையை எட்டியுள்ளதை 2023 ல் வெளியான புதிய ஆய்வறிக்கை ஒன்று எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆய்வின்படி, பூமியின் முக்கியமான காலநிலை குறிகாட்டிகளில் பாதிக்கும் மேற்பட்டவை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன. இது உலகெங்கிலும் வாழும் மக்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்து கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது, உலகளாவிய வெப்பநிலையை உயர்த்தி, காலநிலை மாற்றத்தை வேகப்படுத்துகிறது. […]

பூமியின் காலநிலை மாற்றம் கடுமையான நிலையை எட்டியுள்ளதை 2023 ல் வெளியான புதிய ஆய்வறிக்கை ஒன்று எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆய்வின்படி, பூமியின் முக்கியமான காலநிலை குறிகாட்டிகளில் பாதிக்கும் மேற்பட்டவை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன. இது உலகெங்கிலும் வாழும் மக்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்து கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது, உலகளாவிய வெப்பநிலையை உயர்த்தி, காலநிலை மாற்றத்தை வேகப்படுத்துகிறது. இதன் விளைவாக, அதிதீவிர வெப்ப அலைகள், சூறாவளிகள், கடல் மட்டம் உயர்வு போன்ற பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது போன்ற நிகழ்வுகள் இதற்கு சான்றாகும்.விஞ்ஞானிகள், இந்த நிலை நீடித்தால், உலக நாடுகள் கடுமையான சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றனர். எனவே, இந்த பிரச்சனையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu