பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு மார்ச் வரை பொதுத் தேர்தல் தாமதமாகலாம் என்று உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது, 'புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பொது நலன் கவுன்சில் ஒப்புதல் அளித்த பிறகுதான் பொதுத் தேர்தல் நடைபெறும். அந்த வகையில் அடுத்த ஆண்டு மார்ச் வரை நாட்டில் பொதுத் தேர்தல்கள் தாமதமாகலாம். பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் புதிய தொகுதிகளை வரையறுக்க வேண்டும். இது அரசியலமைப்பு கடமையாகும். தொகுதி எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால் பிப்ரவரி மூன்றாவது வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படும்'.