கட்ச்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், ஹராமி நல்லாவின் நீர் வழித்தடங்களில் ஒன்றின் வழியாக இந்திய எல்லைக்குள் பதுங்கிக் கொண்டிருந்த பாகிஸ்தான் மீனவர்கள் 4 பேரை BSF புஜ்ஜின் சிறப்பு குழுவினர் கைது செய்து 10 பாகிஸ்தான் மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியதாக BSF ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அவ்வறிக்கையில், BSF ரோந்து குழுக்கள் அண்டை நாட்டிலிருந்து வேறு ஏதாவது படகுகள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததா என்பதைக் கண்டறிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதாக ௯றியது. மேலும் “கைப்பற்றிய மீன்பிடி படகுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமான எதுவும் மீட்கப்படவில்லை” என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் சமீபத்தில், கவனக்குறைவாக சர்வதேச எல்லையை (IB) தாண்டிய 3வயது பாகிஸ்தானிய குழந்தையை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அண்டை நாட்டின் பாதுகாப்புப் பணியாளர்களிடம் ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.