பாகிஸ்தான்: வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1136 ஆக உயர்வு

August 30, 2022

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1136 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பலுசிஸ்தான், சிந்து, பஞ்சாப் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பொழிந்துள்ளது. குறிப்பாக, பலுசிஸ்தான் மாகாணத்தில் சராசரி மழை அளவை விட ஐந்து மடங்கு கூடுதலாக மழை பொழிந்துள்ளது. பாகிஸ்தானின் கடந்த 30 வருட சராசரி மழை அளவு 134 மில்லி மீட்டர் ஆகும். ஆனால், இந்த வருடத்தில் 388.7 […]

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1136 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பலுசிஸ்தான், சிந்து, பஞ்சாப் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பொழிந்துள்ளது. குறிப்பாக, பலுசிஸ்தான் மாகாணத்தில் சராசரி மழை அளவை விட ஐந்து மடங்கு கூடுதலாக மழை பொழிந்துள்ளது. பாகிஸ்தானின் கடந்த 30 வருட சராசரி மழை அளவு 134 மில்லி மீட்டர் ஆகும். ஆனால், இந்த வருடத்தில் 388.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 190.07% கூடுதலாகும். அத்துடன், ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் இது நாள் வரை, 375.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது அந்நாட்டின் சராசரி மழை அளவைவிட 2.87% கூடுதலாகும். இதனால், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தால் இரண்டு மில்லியன் ஏக்கர் அளவில் விவசாய நிலங்களும், 3457 கிலோ மீட்டர் நீள சாலைகளும், 157 பாலங்களும் முழுவதுமாகச் சேதம் அடைந்துள்ளன என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1136 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், “சுமார் 5773063 மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும், 33 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமார் 51275 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றும், 498442 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று தேசிய பேரிடர் மேலாண்மையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏழு பாகிஸ்தானியரில் ஒருவர் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் சபாஷ் ஷெரீஃப், "மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும், உதவிகள் செய்வோருக்கும் இடையில் பாலமாக இருந்து செயல்படும்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu