பாகிஸ்தான், டென்மார்க், சோமாலியா, கிரீஸ் மற்றும் பணமா போன்ற நாடுகள் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த நாடுகளின் இரண்டு ஆண்டு உறுப்பினர் பதவி காலம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து தொடங்கும். ஐநா சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றதையடுத்து இந்த நாடுகள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2025 ஜனவரி 1 முதல் 2026 டிசம்பர் 31ம் தேதி வரை இந்த நாடுகளின் உறுப்பினர் பதவி காலம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய பசபிக் பிரிவை சேர்ந்த இடத்தில் சோமாலியா 179 வாக்குகள் பெற்றது. பாகிஸ்தான் 182 வாக்குகள் பெற்றது. லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதிக்கான இடத்தில் பணமா 183 வாக்குகளை பெற்றது. மேற்கு ஐரோப்பா மற்றும் பிற மாநிலங்களுக்கான இடங்களில் டென்மார்க் 184 வாக்குகளும், கிரீஸ் 182 வாக்குகளும் பெற்றன. இது பெருமைக்குரிய தருணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கூறியுள்ளார். மேலும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயலாற்ற ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவது இது எட்டாவது முறையாகும்.