பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் சீனாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் சீனாவில் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த நான்காம் தேதி முதல் அவர் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவுடன் நட்புறவை மேம்படுத்தவும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி கோரவும் அவர் சென்றுள்ளார். கடந்த புதன் அன்று தகவல் தொழில்நுட்ப நகரமான ஷென்ஷனுக்கு அவர் வந்தார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார்.
இந்நிலையில், நேற்று பெய்ஜிங் நகருக்கு வந்துள்ளார். அங்கு அதிபர் ஜிங் பின், பிரதமர் லீ கிகியாங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.