பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் காவல் நீட்டிப்பு

September 27, 2023

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தூதரகம் அனுப்பிய ரகசிய தகவலை அமெரிக்காவுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே தோஷகானா வழக்கில் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் இவரை விசாரணை செய்வதற்காக இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் […]

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தூதரகம் அனுப்பிய ரகசிய தகவலை அமெரிக்காவுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே தோஷகானா வழக்கில் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் இவரை விசாரணை செய்வதற்காக இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக இந்த 16 நாள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 10 ஆம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட உள்ளார். இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவு மந்திரி முகமது குரேஷிக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu