புதிய போப்பை தேர்ந்தெடுக்க வாடிகனில் இன்று ரகசிய ஆலோசனையுடன் வாக்கெடுப்பு தொடங்கியது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, புதிய போப்பை தேர்ந்தெடுக்க வாடிகனில் இன்று ரகசிய ஆலோசனையுடன் வாக்கெடுப்பு தொடங்கியது. போப் பிரான்சிஸ் மார்ச் 21-ஆம் தேதி காலமானார்; அவரது உடல் புனித மேரி பேராலயத்தில் மார்ச் 26-ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து மே 7-ஆம் தேதி புதிய போப்பைத் தேர்வு செய்யும் மாநாடு தொடங்கும் என வாடிகன் அறிவித்தது. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் 133 பேருக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக கார்டினல்கள் ரகசிய காப்பு உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களும், சில முக்கிய நபர்களும் தவிர மற்றவர்களுக்கு சிஸ்டைன் தேவாலயத்திற்குள் அனுமதி கிடையாது. மேலும், வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. புதிய போப்பை தேர்வு செய்ய 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவைப்படும் நிலையில், வெள்ளை புகை வெளிவந்தால் தேர்வு நிறைவு பெற்றதைக் குறிக்கும். இத்தாலி, ஹங்கேரி, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தோர் உள்ளிட்ட 8 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நான்கு கார்டினல்களும் வாக்களிக்க உள்ளனர்.