ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் பிரதமராகிறாா்

February 14, 2024

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் புதிய பிரதமராகிறார். பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக விழாவில் பிலாவல் புட்டோ ஜர்தாரி புதிய அரசியல் பிரதமர் பதவியை கோரப்போவதில்லை என்றும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பேன் என்றும் கூறியிருந்தார். அதனையடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் […]

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் புதிய பிரதமராகிறார்.

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக விழாவில் பிலாவல் புட்டோ ஜர்தாரி புதிய அரசியல் பிரதமர் பதவியை கோரப்போவதில்லை என்றும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பேன் என்றும் கூறியிருந்தார். அதனையடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் புதிய பிரதமராக நியமிக்கப்படுவார் என்று அவரது கட்சியின் செய்தி தொடர்பாளர் மரியம் நேற்று நள்ளிரவு அறிவித்தார். அத்துடன் நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு நவாஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் தான் அதிக இடத்தை பிடித்தனர். நவாஸ் ஷெரிப்பின் பி எம் எல் என் கட்சி 75 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறிவிட்டார். இதனால் புதிய அரசு அமைவதில் இழுப்பறி இருந்து வந்தது. இந்நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளிவந்துள்ளது. தற்போது அதிபராக இருக்கும் ஆரிப் அல்வியின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu