பாகிஸ்தானில் சபாஷ் ஷெரிப் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. அந்த வகையில், புதிய நிதி அமைச்சராக முஹம்மது அவுரங்கசீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஜே பி மோர்கன் நிதி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், ஜே பி மோர்கன் நிறுவனத்தின் சிங்கப்பூர் பிரிவு கார்ப்பரேட் துறையின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்தார்.
பாகிஸ்தானின் மிகப்பெரிய வங்கியானது ஹபீப் வங்கி ஆகும். இதன் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 6 வருடங்களுக்கு பதவி வகித்து வந்த முகமது அவுரங்கசீப், தனது பதவியில் இருந்து விலகி, நாட்டின் நிதி அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். பாகிஸ்தான் நாட்டின் நிதி நிலவரம் மோசமடைந்துள்ள சூழலில், இவரது நியமனம் புது வெளிச்சம் பாய்ச்சும் என நம்பப்படுகிறது.