வங்கியில் 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் ‘பான்’ எண்ணை குறிப்பிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது. அந்த நோட்டுகளை செப்டம்பர் 30-ந் தேதி வரை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்நிலையில் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால் வருமானவரி தேவைக்காக 'பான்' எண்ணை குறிப்பிடுவது நடைமுறையில் இருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வதற்கும் இந்த முறை பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.














