நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 7ம் தேதி துவங்குகிறது. இதில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய மசோதாக்களின் உத்தேச பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில், தேசிய பல் மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதா மற்றும் தேசிய நர்சிங் மற்றும் மருத்துவ உதவியாளர் கமிஷனை உருவாக்கும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
மேலும், பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், மற்றும் தேர்தல் செயல்முறையை சீர்திருத்துதல் உள்ளிட்ட 16 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.