பாராளுமன்ற தேர்தல் பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதால் தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 900 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதால் தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 900 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவ்வகையில் இன்று முதல் வாக்காளர்கள் அனைவருக்கும் பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் உத்தரவு வட்டார அளவிலான அதிகாரிகள் மேற்பார்வையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கி வருகின்றனர். மேலும் இந்த பணி ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணிக்கு கூடுதலாக துணை ராணுவ படையினரும் சென்னை வந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu