பாராளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வடைகிறது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆறு கட்ட தேர்தல்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதன்படி முதல் கட்ட தேர்தலில் 66.14%, இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71%, மூன்றாம் கட்ட தேர்தலில் 65 68%,நான்காம் கட்ட தேர்தலில் 69.16% ஐந்தாம் கட்ட தேர்தலில் 62.20%, ஆறாம் கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து வருகிற ஜூன் ஒன்றாம் தேதி ஏழாவது இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் மொத்தம் 57 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை ஆறு மணிக்கு நிறைவடைகிறது