இன்றைய வர்த்தகத்தில் பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சிறப்பாக வர்த்தகம் அடைந்துள்ளன. தேசிய பங்குச் சந்தையில், இன்றைய காலை நேர வர்த்தக தொடக்கத்தின் போது 349 ரூபாயாக இருந்த ஒரு பங்கு, வர்த்தக நாளின் இடையில் 381.3 ரூபாயாக உயர்ந்தது. அதன்படி, பேடிஎம் பங்கு மதிப்பு 10% அப்பர் சர்க்யூட் அளவை எட்டி உள்ளது.
அண்மையில், பேடிஎம் பங்குகளுக்கான அப்பர் சர்க்யூட் அளவு 5% ல் இருந்து 10% ஆக உயர்த்தப்பட்டது. தேசிய பங்குச் சந்தை இதை அறிவித்தது. பேடிஎம் நிறுவனத்தின் கடந்த காலாண்டு நிதிநிலை அறிக்கைக்கு பிறகு, இது உயர்த்தப்பட்டது. பேடிஎம் நிறுவன வளர்ச்சியில் இடைக்கால சிக்கல்கள் இருந்தாலும், இனிமேல் உயர்வு காணப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு பங்குச் சந்தை மதிப்பீட்டு நிறுவனங்களும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன. அதன்படி, அப்பர் சர்க்யூட் உயர்த்தப்பட்டது.