கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதியம்: அமைச்சர் ஐ.பெரியசாமி

November 19, 2022

கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திண்டுக்கல்லில் 69வது கூட்டுறவு வார விழா நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பொது விநியோக திட்ட முறைகளை பார்வையிட்டு சென்ற ஒன்றிய அமைச்சர்கள், தமிழகத்தில் ரேஷன் கடைகளின் செயல்பாட்டை பாராட்டி, சான்றிதழ் வழங்கியுள்ளனர். தமிழகத்தில் மகளிர் […]

கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் 69வது கூட்டுறவு வார விழா நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பொது விநியோக திட்ட முறைகளை பார்வையிட்டு சென்ற ஒன்றிய அமைச்சர்கள், தமிழகத்தில் ரேஷன் கடைகளின் செயல்பாட்டை பாராட்டி, சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் ரூ.2,755 கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.10,292 கோடி மதிப்பிலான விவசாய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu