மேகதாது அணை கட்டுவதற்கு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கர்நாடக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து பேசினார். அப்போது காவேரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு அனுமதி வழங்க ஆவணம் செய்யுமாறு வலியுறுத்தினார். கர்நாடகாவில் விரைவில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பிரச்சனையை பசவராஜ் பொம்மை கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில் மேகதாது அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி பெரும் முனைப்பில் மாநில பாஜக தலைவர்களும், டெல்லிக்கு தொடர்ந்து படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.