இன்று மதியம் முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவர்கள் விடைத்தாள்கள் நகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிதிருந்த மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் தங்களின் விடைத்தாள்களை www.dge.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் பதிவிறக்கம் செய்யும்பொழுது பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். விடைத்தாள்கள் பதிவிறக்கம் செய்த பின்பு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நாளை பிற்பகல் ஒரு மணி முதல் ஒன்றாம் தேதி மாலை 5 மணி வரை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது