25 நகரங்களில், 50 கோடி மதிப்பில் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் - மாசு கட்டுப்பாட்டு வாரியம்

February 17, 2023

தமிழகத்தை சேர்ந்த 25 நகரங்களில், சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பில், காற்று தர கண்காணிப்பு நிலையங்களை அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில், மக்கள் தொகை அதிகமாக உள்ள நகரங்கள், தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள நகரங்கள் ஆகியவற்றில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஏற்கனவே 34 நிலையங்கள் நிறுவப்பட்டு, 24 மணி நேர செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையங்களில் பொதுமக்கள் நிகழ் நேர மாசு நிலவரத்தை பார்க்கும் வசதிகள் […]

தமிழகத்தை சேர்ந்த 25 நகரங்களில், சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பில், காற்று தர கண்காணிப்பு நிலையங்களை அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில், மக்கள் தொகை அதிகமாக உள்ள நகரங்கள், தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள நகரங்கள் ஆகியவற்றில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஏற்கனவே 34 நிலையங்கள் நிறுவப்பட்டு, 24 மணி நேர செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையங்களில் பொதுமக்கள் நிகழ் நேர மாசு நிலவரத்தை பார்க்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, கூடுதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதிய மாநகராட்சிகளான காஞ்சிபுரம், ஆவடி,தாம்பரம், கும்பகோணம், விடுபட்ட மாவட்ட தலை நகரங்களான தருமபுரி, நாகர்கோவில், பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருவாரூர் திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, புதிய மாவட்டதலைநகரங்களான கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி, திருப்பத்தூர், செங்கல்பட்டு மேலும் பல்லாவரம், காரைக்குடி, ராஜபாளையம், ஆம்பூர், நெய்வேலி ஆகிய 25 நகரங்களில் புதிய மாசு கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu