போர்ச்சுகல் - சுற்றுலா வந்த இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால், சுகாதார அமைச்சர் ராஜினாமா

September 1, 2022

போர்ச்சுகலுக்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண், அவசரக்கால சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்டதால் உயிரிழந்தார். இதனால் கடும் விமர்சனத்திற்கு ஆளான போர்ச்சுகலின் சுகாதார அமைச்சர் மர்டா டெமிடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய கர்ப்பிணிப் பெண் ஒருவர், லிஸ்பன் நகரில் உள்ள சோ பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனையில் உடனடி சிசேரியன் அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சையில் 722 கிராம் எடையுள்ள இளம் சிசுவை ஈன்ற பின்னர், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், […]

போர்ச்சுகலுக்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண், அவசரக்கால சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்டதால் உயிரிழந்தார். இதனால் கடும் விமர்சனத்திற்கு ஆளான போர்ச்சுகலின் சுகாதார அமைச்சர் மர்டா டெமிடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய கர்ப்பிணிப் பெண் ஒருவர், லிஸ்பன் நகரில் உள்ள சோ பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனையில் உடனடி சிசேரியன் அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சையில் 722 கிராம் எடையுள்ள இளம் சிசுவை ஈன்ற பின்னர், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக, சோ பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனையில் இருந்து, டீ சாண்டா மரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு மாற்றும் வழியில் அவருக்கு இருதய சுவாச அடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் அலைக்கழிக்கப் பட்டதாலேயே இந்த மரணம் நேர்ந்தது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கடந்த சனிக்கிழமை அன்று, இந்திய கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த செய்தி வெளிவந்த 5 மணி நேரத்திற்குப் பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர் மர்டா டெமிடோ, தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். தான் இந்தப் பதவிக்கு தகுதி இல்லை எனக் கூறி அவர் ராஜினாமா செய்துள்ளதை அந்நாட்டின் பிரதமரும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவந்துள்ளது. அந்நாட்டின் அரசாங்க இணையதளம் மூலம், சுகாதாரத்துறை அமைச்சரின் ராஜினாமாவை எதிர்நோக்கி பிரதமர் காத்திருந்தது மற்றும் மாற்று அமைச்சரை நியமிக்க இருப்பது போன்ற தகவல்கள் தெரியவந்துள்ளன. சுகாதாரத்துறை அமைச்சரின் ராஜினாமா செய்தி, பிரதமர் மூலம் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது என்றும், மாற்று அமைச்சர் நியமிக்கப்படும் வரை, மர்டா பதவியில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுகாதாரத்துறை செயலாளர்களான அந்தோணிய லாசர் டா சேல்ஸ் மற்றும் மரியா டி பாத்திமா போன்சேக ஆகியோரும் அமைச்சகத்தில் இருந்து வெளியேறுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu