கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு காரணமாக ஜனவரி 29ஆம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு காரணமாக கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து இன்று பராமரிப்பு பணிகள் முடிவடைந்து 79 நாட்களுக்குப் பிறகு மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. சுமார் 300 மெகாவாட் உற்பத்தி தொடங்கிய நிலையில் படிப்படியாக அதிகரித்து ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இரண்டாவது அணு உலையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.