பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் சிதம்பரம் முன்னிலையில் உள்ளனர்.
செக் குடியரசில் நடைபெற்று வரும் பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் சிதம்பரம் முதன்மை இடத்தை தக்க வைத்துள்ளனர்.
9 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் மொத்தம் 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 6வது சுற்றில், கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சாம் ஷன்லாந்துடன் 43-வது நகர்த்தலில் டிரா செய்தார். அதேபோல், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அரவிந்த் சிதம்பரம், 32-வது நகர்த்தலில் வியட்னாமின் லீம் லீவுடன் டிரா கண்டார்.
இதையடுத்து, 6 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றனர்.