ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் 15-ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை ஜனாதிபாதி திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஜூன் 5ஆம் தேதி ஜனாதிபதியின் வெளிநாடு பயணத்தை கருத்தில் கொண்டு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஜனாதிபாதி திரவுபதி முர்மு ஜூன் 15-ம் தேதி சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அவர் சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.