சூரினாம் நாட்டிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு முறைப் பயணம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சூரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திரவுபதி முர்மு விமானம் மூலமாக சூரினாம் நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டின் தலைநகரான பராமரிபோவில் உள்ள ஜோஹன் அடால்ஃப் பெங்கல் சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சூரினாம் நாட்டின் ஜனாதிபதி சந்திரிகா பெர்சாத் சாந்தோகியை சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. […]

ஜனாதிபதி திரவுபதி முர்மு தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சூரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

திரவுபதி முர்மு விமானம் மூலமாக சூரினாம் நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டின் தலைநகரான பராமரிபோவில் உள்ள ஜோஹன் அடால்ஃப் பெங்கல் சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சூரினாம் நாட்டின் ஜனாதிபதி சந்திரிகா பெர்சாத் சாந்தோகியை சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சவுரபா குமார் வெளியிட்டிருந்த அறிக்கையில், அரசு முறைப்பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜூன் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சூரினாம், செர்பியா நாடுகளுக்கு செல்கிறார் எனவும், இப்பயணத்தின் போது சூரினாம் மற்றும் செர்பியா நாடுகளின் அதிபர்களை சந்தித்து இருநாடுகளின் நட்புறவு குறித்து பேசுவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu