ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுலோவாகியாவின் கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடான சுலோவாகியாவை விஜயக்கொண்டுள்ளார். நேற்று, அவர் அங்குள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், பொது சேவையில் அவரது சிறந்த பணிகளை அங்கீகரித்து, அந்த பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நிர்வாகம், சமூக நீதிக்கு குரல் கொடுத்தல் மற்றும் உள்ளடக்கிய பணிகளுக்காக இந்தப் பட்டம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, "தத்துவ ஞானி செயிண்ட் கான்ஸ்டன்டைன்சிரிலின் பெயர் கொண்ட ஒரு நிறுவனத்தில் பட்டம் பெறுவது, மொழி, கல்வி மற்றும் தத்துவத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளின் காரணமாக மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது" என மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், "கல்வி என்பது தனிநபர் அதிகாரமளிப்புக்கு மட்டுமல்லாமல், தேசிய வளர்ச்சிக்கும் ஒரு வழிமுறையாகும்" என்று அவர் கூறினார்.