மாலத்தீவில் ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அதிபர் தேர்தலில் அறுதி பெரும்பான்மை உடன் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, முகமது முய்சு மாலத்தீவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். அவரது நடைமுறைகள் காரணமாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை முழுமையாக வெளியேற்றுவதே அவரது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. அவரது இந்திய எதிர்ப்புக் கொள்கையை அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி விமர்சித்து வந்தது. இதனிடையே, நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. மொத்தம் உள்ள 93 தொகுதிகளில், 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.