ஈகுவடார் நாட்டின் இடைக்கால அதிபராக சின்தியா கெல்லிபர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈகுவடார் நாட்டின் தற்போதைய அதிபர் டேனியல் நோபோவா தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைகின்றது, இதனால் அடுத்த மாதம் (ஏப்ரல்) நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், ஆளுங்கட்சி சார்பில் அதிபர் டேனியல் நோபோவா மீண்டும் போட்டியிடுகின்றார், அவரை எதிர்த்து இடதுசாரி வேட்பாளர் லூயிசா கோன்சலசும் போட்டியிடுகின்றார்.
ஆனால், அந்நாட்டு சட்டத்தின்படி, தேர்தல் பிரசாரத்தின் போது அதிபரின் அதிகாரங்கள் துணை அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்நிலையில், அதிபருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த ஆண்டு துணை அதிபர் வெரோனிகா அபாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர், இந்த பதவி காலியாக இருந்ததால், அதிபரின் அதிகாரங்கள் மாற்றப்படாமல் இருந்தன.
இந்த நிலையில், ஆளுங்கட்சியின் பொதுச்செயலாளர் சின்தியா கெல்லிபர்ட்டை இடைக்கால அதிபராக நியமித்து அதிபர் டேனியல் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தின்போது, அதிபரின் அதிகாரங்கள் விரைவில் சின்தியாவிடம் மாற்றப்பட உள்ளன.














