பாராளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி இன்று மனு தாக்கல் செய்கிறார்.
வாரணாசி தொகுதியில் இன்று பிரதமர் மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் பாஜகவின் தோழமைக் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து வாரணாசிக்கு சந்திரபாபு நாயுடு இன்று காலை விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் வந்தடைந்தார். பின்னர் அங்கு ஏற்படு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டணி நிகழ்ச்சியில் பிரச்சாரம் செய்து பின்னர் விமான நிலையத்தில் இருந்து விஜயவாடா திரும்புகிறார்