பிரதமர் மோடி நான்காவது முறையாக கர்நாடகம் வருகை

April 20, 2024

பிரதமர் நரேந்திர மோடி நான்காவது முறையாக கர்நாடகாவிற்கு வருகை தர உள்ளார். கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தல் இரண்டு கட்டமாக வருகிற 26 மற்றும் மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட ஓட்டு பதிவிற்கு இன்னும் ஒரு வார காலமே மிஞ்சியுள்ள நிலையில் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகு மோடி பிரச்சாரம், பொதுக்கூட்டம், வாகன பேரணி என மூன்று முறை கர்நாடகா வருகை தந்துள்ளார். […]

பிரதமர் நரேந்திர மோடி நான்காவது முறையாக கர்நாடகாவிற்கு வருகை தர உள்ளார்.

கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தல் இரண்டு கட்டமாக வருகிற 26 மற்றும் மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட ஓட்டு பதிவிற்கு இன்னும் ஒரு வார காலமே மிஞ்சியுள்ள நிலையில் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகு மோடி பிரச்சாரம், பொதுக்கூட்டம், வாகன பேரணி என மூன்று முறை கர்நாடகா வருகை தந்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக மீண்டும் என்று கர்நாடகாவிற்கு சிறப்பு விமான மூலம் வருகை தருகிறார். பின்னர் சிக்பள்ளாபூரில் நடைபெற உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, அதனை முடித்து ஆறு மணி அளவில் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனை அடுத்து பெங்களூர் மற்றும் சிக்பள்ளாபூரில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷா 23,24 ஆம் தேதி கர்நாடகாவில் ஓட்டு வேட்டையில் ஈடுபட உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu