பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் மோடி திருப்பூர் வருகை

February 3, 2024

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் மாவட்டத்திற்கு பாஜக பொதுக்கூட்டத்திற்காக பிப்ரவரி 25ஆம் தேதி வருகை தர உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் சாதனைகள் திட்டங்களை விளக்கி என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம் ஆனது பதினெட்டாம் தேதியுடன் நிறைவடையுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பாதப்பூரில் நிறைவு விழா பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. மேலும் இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தேர்தல் […]

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் மாவட்டத்திற்கு பாஜக பொதுக்கூட்டத்திற்காக பிப்ரவரி 25ஆம் தேதி வருகை தர உள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் சாதனைகள் திட்டங்களை விளக்கி என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம் ஆனது பதினெட்டாம் தேதியுடன் நிறைவடையுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பாதப்பூரில் நிறைவு விழா பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. மேலும் இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதனை அடுத்து பாஜக சார்பில் பொது பொதுக்கூட்டத்திற்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. மேலும் 10 லட்சம் பேரை திரட்டி பிரம்மாண்டமாக மாநாடு போல நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே திருப்பூரில் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட என் மண், என் மக்கள் பாதை யாத்திரை 25ஆம் தேதி திருப்பூரில் நடத்தவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu