சென்னையில் உள்ள சீயோன் பள்ளியில் இரண்டாவது சர்வதேச ஓபன் பீடே ரேட்டிங் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
மவுண்ட் செஸ் அகாடமி சார்பில் சீயோன் - ஆல்வின் கல்விக் குழுமம் சார்பில் இரண்டாவது சர்வதேச ஓபன் பீடே ரேட்டிங் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, கென்யா, கொரியா, ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 534 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியின் முடிவில் ஆறு வீரர்கள் 7 புள்ளிகளில் இருந்து டை பிரேக்கர் முறையில் தமிழக வீரர் ஆயுசு ரவிக்குமார் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு ரூபாய் 30,000 பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இதனை அடுத்து கோகுல் கிருஷ்ணா, ராமகிருஷ்ணன், ஹரி கணேஷ், அஸ்வந்த் ஆகியோர் இரண்டு முதல் ஆறு இடங்களை பிடித்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது.