நிலநடுக்கம் நடுவே கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு – கராச்சி சிறையில் கலவரம்

June 4, 2025

கராச்சியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், மாலிர் சிறையில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. பாதுகாப்புக்காக 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் பிரதான வாயிலுக்கு கொண்டு வரப்பட்ட வேளையில், ஒரு குழு கைதிகள் வாயிலை உடைத்து தப்ப முயன்றனர். இதனால் சிறைத்துறையினருக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு காவலர் காயம் அடைந்தனர். பரபரப்பை பயன்படுத்தி 216 கைதிகள் தப்பியோடியது தெரியவந்தது. அவ்வாறு தப்பியவர்களில் 80 பேர் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர். சிறையின் […]

கராச்சியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், மாலிர் சிறையில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. பாதுகாப்புக்காக 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் பிரதான வாயிலுக்கு கொண்டு வரப்பட்ட வேளையில், ஒரு குழு கைதிகள் வாயிலை உடைத்து தப்ப முயன்றனர்.

இதனால் சிறைத்துறையினருக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு காவலர் காயம் அடைந்தனர். பரபரப்பை பயன்படுத்தி 216 கைதிகள் தப்பியோடியது தெரியவந்தது. அவ்வாறு தப்பியவர்களில் 80 பேர் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர். சிறையின் சுவரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விரிசல் இந்த சூழ்நிலைக்குக் காரணமாக இருந்ததாக சிந்து மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள கைதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu