11-வது புரோ கபடி லீக் தொடரில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. தொடர் முழுவதும் இரண்டு கட்ட ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டா மற்றும் மகாராஷ்டிரா புனே நகரில் நடந்தது. பிளே ஆப் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதாஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிகளில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 32-23 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.